தமிழகத்தில் இன்று
4 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பொறியியல் கல்லூரிகள், ஐந்து பாலிடெக்னிக்குகளுக்கானஅங்கீகாரத்தை அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.யூ.) ரத்து செய்துள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மொத்தம் 12 என்ஜீனியரிங் மற்றும் பாலிடெக்னிக்குகளின்அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில், 2000-2001-ம் கல்விஆண்டில் புதிதாக எந்த மாணவரையும் சேர்க்கக்கூடாது என ஏஐசிடியூ செயதிக் குறிப்பு தெரிவிக்கிறது.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பெயர்கள் வருமாறு:
என்ஜினியரிங் கல்லூரிகள் : அறுபடைவீடு தொழில் நுட்பக் கல்லூரி (செங்கல்பட்டு), பாரத் நிகேதன்என்ஜினியரிங் கல்லூரி (தேனி), கல்சார் என்ஜினியரிங் கல்லூரி (காஞ்சிபுரம்), சன் என்ஜினியரிங் மற்றும்தொழில்நுட்பக் கல்லூரி (கன்னியாகுமரி).
பாலிடெக்னிக்: அருள்மிகு கள்ளழகர் பாலிடெக்னிக் (மேலூர்), அருள்மிகு செந்தில் ஆண்டவர்பாலிடெக்னிக் (தென்காசி), காதர் மொய்தீன் தொழில்நுட்பக் கல்லூரி (பெருந்துறை), முருகாபாலிடெக்னிக் (விழுப்புரம்), பி.ஜி.பி.பாலிடெக்னிக் (நாமக்கல்), பி.ஜி. பாலிடெக்னிக் (தருமபுரி),எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் (தருமபுரி), சன் தொழில் நுட்பக் கல்லூரி (நாகர்கோயில்), டிரஸ்ட்இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் மற்றும் மரைன் என்ஜினியரிங் (திருத்தணி).
எம்சிஏ: பொன்னமம் இன்ஸ்டியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்(சென்னை), கிருபானந்த வாரியார் என்ஜினியரிங் கல்லூரி (சேலம்).












Click it and Unblock the Notifications