தமிழகத்தில் இன்று
ஒற்றுமையுடன் வாழ அழைக்கிறார் பிஜி புதிய அதிபர்
சுவா:
பிஜி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் ராட்டு ஜோசிபா இலாய்லோ கேட்டுக்கொண்டுள்ளார்.
பிஜி நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் சிடிவேனி ரபூகாபதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், பிஜியின் முன்னேற்றத்துக்காகவும், எதிர்கால நலனிற்காகவும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.பிரச்சனைகள், புரட்சிகள் என்ற நிலையிலிருந்து நாடு இப்போதுதான் விடுபட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார். அதிபர் இலாய்லோ, புரட்சிக்காரர் தலைவர் ஜார்ஜ்ஸ்பீடால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை:
புரட்சி முடிந்த பின் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள், தங்கள் வசம் இருந்த அரசு ஆயுதங்களை ஒப்படைப்பதாக தெரிவித்திருந்தனர். சிலஆயுதங்களையும் திரும்பக் கொடுத்தனர். இருப்பினும், சில துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை.
புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், டவாமசு பகுதியில் கலவரம் நடந்துள்ளது. அங்கிருந்து 100 இந்தியக் குடும்பங்கள்வெளியேறியுள்ளன. இதற்கு ஸ்பீட் ஆதரவாளர்கள் காரணமல்ல. புதிய அமைச்சரவையில் இந்தியர்கள் பதவியேற்றால் பெருங்கலவரம் வெடிக்கும்என்றார்.












Click it and Unblock the Notifications