தமிழகத்தில் இன்று
கன்னியாகுமரியில் மீனவர்கள் மோதலில் துப்பாக்கிச்சூடு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைக் கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசாரும்,நான்கு மீனவர்களும் காயமடைந்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் காலியாயிருந்த ஆசிரியர் பணியிடத்திற்கு பெண் ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்தபணியிடத்திற்கு வாவரை கிராமத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியார் பள்ளிக்கூடத்திற்குவந்தனர். தங்கள் பகுதிபெண் தேர்வாகாததற்கு காரணமாக அவர்கள் கருதிய பாதிரியாரை, மீனவர்கள் தாக்கினர். அப்போது பள்ளிக்கூடவளாகத்திலுள்ள சர்ச்சில் அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அங்கிருந்த மீனவர்கள் பாதிரியாரை கும்பலிடமிருந்து மீட்டனர். அப்போது வாவரை பகுதி மீனவர்களுக்கும், புனித அந்தோனியார்பள்ளிக்கூடம் அருகிலுள்ள மீனவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
சம்பவம் குறித்த அறிந்து போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்களையும் மீனவர்கள் தாக்கினர். இதையடுத்து போலீஸார் வானை நோக்கி இரண்டுமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 போலீசாரும், 4 மீனவர்களும் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.