தமிழகத்தில் இன்று
அமெரிக்க உளவு நிறுவனத்தை எதிர்த்து ஆக. 9-ல் போராட்டம்
ஈரோடு:
அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐயின் கிளையை இந்தியாவில் நிறுவ மத்தியஅரசு அனுமதிக்கக் கூடாது என்று கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9-ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான பெரியசாமி திங்கள்கிழமைநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு நேர்மாறாகதற்போது இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷனை(எப்.பி.ஐ.) டெல்லியில் நிறுவ மத்திய அரசு அனுமதித்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூண்றவும் மத்திய அரசு அனுமதிக்கிறது.இவற்றை எதிர்த்தும், அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் போராடஇந்திய கம்யூனிஸ்ட் தீர்மானித்துள்ளது.
இதையொட்டி, தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி இப்பேராட்டம் நடக்கும். ஒரு லட்சம்தொண்டர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்பெரியசாமி.












Click it and Unblock the Notifications