தமிழகத்தில் இன்று
ஜெ.வின் ரூ, 11 கோடி சொத்துக்களை முடக்க உத்தரவு
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ரூ 11.59 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை முடக்கி வைக்குமாறு முதலாவது தனிநீதிமன்ற நீதிபதிஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சிகாலத்தின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட, சசிகலா, சுதாகரன்,இளவரசி, இவரது மகன் விவேக் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு முதலாவது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏற்கனவே ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 24 வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் நல்லம்மநாயுடு முதலாவது தனிநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதன்படி, ஜெயலலிதா தனது பெயரிலும், சசிகலா, சுதாகரன், இளவரசி, அவரது மகன் விவேக் ஆகியோரின் பெயரிலும் வாங்கியுள்ள ரூ 11 கோடியே 59லட்சத்து 49 ஆயிரத்து 158 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை முடக்க வேண்டும்.
இல்லாவிடில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை விற்றுவிடவோ அல்லது இடமாற்றம் செய்யவோமுயற்சிக்கலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தன்னை கொடுமைப்படுத்தவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும்,இம்மனுவைத் தனிநீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். கடந்த வாரம் இம்மனு மீதான இருதரப்பு வக்கீல்கள் வாதம் செய்தனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட தனிநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிரந்தரமாக முடக்கி வைக்கஉத்தரவிட்டார்.
அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி வைக்கக் கோரி வழக்கின் புலன்விசாராணை அதிகாரி தாக்கல் செய்த இந்த மனுவை சிறுவழக்குகளைவிசாரிக்கும் நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த மனுவைத் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு எந்த வித அதிகாரமும் இல்லைஎன்றும் ஜெயலலிதாவின் வக்கீல் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த மனுவை விசாரிக்க தனிநீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. அரசுத் தரப்பினர் தாக்கல் செய்த இந்த மனு ஏற்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டிருந்தாலும் விசாரணை முடியும் வரை ரூ 11.59 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள்அனைத்தும் நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும். ஜெயலலிதா மற்றும் நான்கு பேருக்குச் சொந்தமான 21 வாகனங்களை உடனடியாக அதன்ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications