தமிழகத்தில் இன்று
முதல்வரை சந்தித்த விருது பெற்ற நடிகர்கள்
சென்னை:
தமிழக அரசின் விருதுகள் பெற்ற நடிகர், நடிகைகள் கோட்டையில் முதல்வர்கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
1998-ம் ஆண்டிற்குரிய தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளுக்கும், திரைப்படத்தொலைக் காட்சி தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்களுக்கான விருதுகள் சமீபத்தில்அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் ஆகியோர் செவ்வாய் கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர்கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
சிறந்த நடிகர் விருது பெற்ற சரத்குமார், சிரிப்பு நடிகர் விருது பெற்ற செந்தில், சிறந்தநடிகைள் விருது பெற்ற ரோஜா, ரேவதி, சிறந்த பாடகர் விருது பெற்ற மலேசியாவாசுதேவன், சிறந்த டைரக்டர் விருது பெற்ற விக்ரமன், சிறந்த படத்திற்கான விருதுபெற்ற தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், ஹென்றி, எல்.ரளி, சுவாமிநாதன்,ஜி.வேணுகோபால், எச்.ரளி, அதா துரைராஜ், கவிஞர் பழனிபாரதி, இசையமைப்பார்பாபி, கவிஞர் அறிவுமதி.
ஸ்டன்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம், நடனக் கலைஞர் ராஜூ, தொழில்நுட்பகலைஞர்கள் அண்ணாதுரை, எம்.என்.ராஜா, திருமலைகுமார், மாதவகிருஷ்ணன்,சக்திகுமார், கிருத்திகா காந்தி, பகவத்சிங் ஆகியோர் கோட்டையில் முதல்வர்கருணாநிதிக்கு சால்வைகள் அணிவித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு முதல்வர்கருணாநிதி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது தமிழ்நாடு திரைபப்டத் தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சிநிறுவனம் மற்றும் திரைப்படப்பிரிவு இயக்குனர் பி.அமிர்தம் உடனிருந்தார்.