For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பாட்னா:

பாட்னா விமான விபத்தில் பலியானவர்களில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

பாட்னாவிலிருந்து டெல்லி கிளம்பிய அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பாட்னா விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து, வெடித்துச் சிதறியதில் 61பேர் இறந்தனர். திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

விமான விபத்தில் இறந்தவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் ராமச்சந்திரன், ஜெயகுமார், கிருஷ்ணமூர்த்தி,மற்றும் ஏ.கே.ராய் ஆவர். ராமச்சந்திரன், சென்னை டி.டி.கே.பார்மா நிறுவன பொதுமேலாளராகப் பணியாற்றி வந்தார். விபத்து நடப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன் கல்கத்தா சென்ற இவர் அங்கிருந்து பாட்னா சென்ற இந்த விமானத்தில் பயணம் செய்த போது இவ்விபத்து நடந்தது. ஏ.கே.ராய்சென்னை ஐ.சி.ஐ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே மத்திய விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் ஜங் கூறுகையில், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு 3.5 லட்ச ரூபாய்நஷ்டஈடும், காயமடைந்தவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.

விபத்துக்குள்ளான விமானம் இன்ஷூர் செய்யப்பட்டுள்ளதால் விபத்தால் இடிந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X