தமிழகத்தில் இன்று
ஆங்கிலத்தை ஓரம்கட்டவில்லை என்கிறார் அன்பழகன்
திருச்சி:
ஆங்கிலத்தை ஓரம்கட்டி விட்டு தமிழை முன்னிலைப்படுத்த தமிழக அரசுதிட்டமிடவில்லை என்று மாநில கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
திருச்சியில் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு என்ற தலைப்பில் நடந்தமாநாட்டைத் துவக்கி வைத்து அன்பழகன் பேசியதாவது:
ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழை பயிற்று மொழியாக்கினால், மாணவர்களைச் சிறந்தமுறையில் தயார்படுத்தலாம் என்பதற்காகவே தமிழை கட்டாய பயிற்று மொழியாக்கவேண்டும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. ஆங்கில மொழியை ஓரம் கட்டவோஅதை ஒழிக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை.
தமிழைப் பயிற்று மொழியாக எடுத்துக் கொண்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றதவறான கருத்தை மாணவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள்தான் அகற்ற வேண்டும்.தமிழகத்தில் பல்வேறு உயர் நிலைகளை எட்டிய பலர் தமிழில்தான் படித்தவர்கள்என்பதை மாணவர்களுக்கு ஆசிரியிர்கள் எடுத்துக் கூற வேண்டும் என்றார்அன்பழகன்.
யு.என்.ஐ.