தமிழகத்தில் இன்று
அமெரிக்க விவாகரத்து சட்டத்தை எதிர்த்து கிளின்டனுக்கு இந்திய தொழிலதிபர் கடிதம்
டெல்லி:
தனது திருமணத்தை ரத்து செய்த அமெரிக்க விவாகரத்து சட்டத்தை எதிர்த்து அமெரிக்கஅதிபர் பில் கிளின்டனுக்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அலோக் நந்தா கடிதம்எழுதியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அலோக் நந்தா இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றி வருகிறார்.இவர் தான் காதலித்து வந்த குர்மீத் கவுர் சத்தா என்பவரை 1997-ம் ஆண்டில்திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள குர்மீத் கவுரின் பெற்றோர்கள்மறுத்துவிட்டனர். குர்மீத் கவுரின் தந்தை பெரிய தொழிலதிபர். பல பெரிய அரசியல்புள்ளிகளின் செல்வாக்கு பெற்றவர். டெல்லியில் பல உணவகங்களை நடத்திவருகிறார்.
மகளைத் திருமணம் செய்து கொண்ட அலோக் நந்தா மீது கடத்தல், சித்ரவதை, மோசடி,கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீஸில் பல வழக்குகளைப் பதிவுசெய்தார்.
பின்னர், அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் மெக்கினனே மாவட்டநீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு குர்மீத் கவுர் சார்பில் மனுத் தாக்கல் செய்தார்.பெற்றோரின் நிர்பந்தத்தால் விவாகரத்து பெறவும் குர்மீத் கவுர் சம்தம் தெரிவித்தார்.
இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து அளித்துத்தீர்ப்பளித்தது.
உலகத்தில் எங்கு வசித்தாலும் அமெரிக்காவில் குறைந்தது 3 மாதம் முதல் 2ஆண்டுகள் வரை வசிக்கும் அனுமதியும், வசதியும் பெற்ற யாரும் அமெரிக்கவிவாகரத்துச் சட்டப்படி விவாகரத்து பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவனால் மனைவிக்கோ, மனைவியால் கணவருக்கோ எவ்வளவு பாதிப்பும்,கொடுமையும் செய்யப்பட்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்கநீதிமன்றங்கள் விவாகரத்து செய்து விடும்.
இந்த அமெரிக்க விவாகரத்து சட்டத்தால் பாதிக்கப்பட்ட அலோக் நந்தா, அதைஎதிர்த்து அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தவிர,வெளிநாட்டுச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தையும் அவர்தொடங்கியுள்ளார்.
வெளிநாட்டுச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி போராடவும் அவர்முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்புஆர்ப்பாட்டம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications