தமிழகத்தில் இன்று
மொரீஷியசில் பெட்ரோல் விற்பனையை துவக்குகிறது இந்தியன் ஆயில் நிறுவனம்
டெல்லி:
மொரீஷியசில், இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனையை துவக்க உள்ளது. இதற்காகமுதற்கட்டமாக ரூ.44 கோடி அந் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ராம் நாயக்கும் மொரீஷியசின் துணை பிரதமரும், வெளியுறவு மற்றும்சர்வதேச வர்த்தகத் துறைத் அமைச்சருமான ராஜேஷ்வர் புன்யாக்கும்செவ்வாய்கிழமை கையெழுத்திட்டனர்.
இப் புதிய ஒப்பந்தப் படி மொரீஷியஸ் நாட்டில் மெர் ரோக் என்ற இடத்தில்பெட்ரோலிய நிறுவனத்தையும், எஸ்.எஸ்.ஆர். சர்வதேச விமான நிலையத்தில்விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான வசதிகளையும் இந்தியன் ஆயில்நிறுவனம் அமைக்கும்.
இது தவிர மொரீஷியஸில் சமையல் எரிவாயுவைச் சேமித்து, அதை சிலிண்டர்களில்அடைத்து விற்பனை செய்யும் பணியிலும் இந்தியன் ஆயில் நிறுவனம் முதலீடு செய்யஉள்ளது என்று அந் நிறுவன செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மொரீஷியஸ் நாட்டின் பெட்ரோலியத் தேவை ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம்டன்னாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யும்பணியில் மொரீஷியசின் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்டிசி) ஈடுபட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் பணிகளை பன்னாட்டுபெட்ரோலிய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications