தமிழகத்தில் இன்று
ரூ.28 கோடி அபராதம்: தினகரன் மனு மீது 24-ம் தேதி இடைக்கால தீர்ப்பு
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அ.தி.மு.க. எம்பி தினகரன் ரூ.28 கோடி அபாரதம் செலுத்த வேண்டும்என்று மேல்முறையீட்டுக் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 24-ம் தேதிஇடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தைத் துவக்கி அந் நிறுவனத்தின் மூலம் அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில்ஈடுபட்டு ரூ.65 கோடிக்கு அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக தினகரன் மீது அமலாக்கப் பிரிவினர் வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை வாரியம், அபராதமாக ரூ.31 கோடி செலுத்துமாறுதினகரனுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தினகரன் அப்பீல் செய்தார். டெல்லியில் உள்ள மேல்முறையீட்டுவாரியம், அபராதத் தொகையை ரூ.28 கோடியாக குறைத்து உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு வாரியத்ததின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும்என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வெங்கடாசலமூர்த்தி, ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்விசாரித்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், தினகரன் சார்பில் சீனியர் வக்கீல் பி.குமார்ஆகியோர் வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ் வழக்கில் 24-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகஅறிவித்தனர்.