For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜியில் அரசியல் நெருக்கடி - தனி அரசு அமைக்க மகேந்திர சவுத்ரி முயற்சி

வெலிங்டன்:

பிஜியில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்துநீக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர சவுத்ரி தனி அரசு அமைக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தென் பசிபிக் நாடான பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. பிஜிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர்ஆயுதங்களுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்படபலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

அதன் பிறகு பிஜியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்தின் கையில் ஆட்சிவந்தது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிஜியில்பிஜி நாட்டவர்களைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவேண்டும் என்றுபுரட்சிக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி முன்னாள் அதிபரான இலாய்லோ மீண்டும் அதிபராக நியமிக்கப்பட்டார்.அவரது தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. ஆனால், தனது ஆதரவாளர்கள்4 பேர் மட்டுமே அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை ஜார்ஜ் ஸ்பீட்எதிர்த்தார்.

இதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாடுமுழுவதும் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந் நிலையில், பிஜியின் மேற்குப் பகுதி மாகாணமான விடி லெவு தீவில் தனி அரசுஅமைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி ஈடுபட்டுள்ளார்.

இதற்காக தனது மக்கள் கூட்டணிக் கட்சியின் முன்னாள் அமைச்சரவை சகாக்களுடன்சோரோகோபா என்ற கிராமத்தில் அவர் புதன்கிழமை பேச்சு நடத்தினார். தொடர்ந்துஅவர்களுடன் அவர் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜார்ஜ் ஸ்பீட்டும் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தனது ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து பிஜியில் அரசியல் நெருக்கடிதீவிரமடைந்துள்ளது.

இந்திய வம்சாவளியினருக்கும், பிஜி நாட்டவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் பிஜியில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றுபுரட்சிப்படையினரின் செய்தித் தொடர்பாளர் ஜோ நாதா தெரிவித்தார்.

இதற்கிடையே, பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து தாற்காலிகப்பிரதமர் லெய்சேனியா காராசேவை புதிய அதிபர் ராது ஜோசெஃபா இலாய்லோசந்தித்துப் பேச உள்ளார்.

இலாய்லோவின் உடல்நிலை காரணமாகவே புதன்கிழமை நடைபெற இருந்த புதியஅமைச்சரவை பதவியேற்பு ரத்து செய்யப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர்தெரிவித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X