தமிழகத்தில் இன்று
ஆட்சி அமைக்க உலக நாடுகளின் உதவி கோருகிறார் பிஜி முன்னாள் பிரதமர்
சோரோகோபா:
பிஜியில் தனது தலைமையிலான கூட்டாட்சி மீண்டும் ஏற்பட உலக நாடுகள் உதவவேண்டும் என்று பிஜியின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிஜி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபத் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் கடந்த மே 19-ம் தேதிநடந்த புரட்சியால் ஆட்சியை இழந்தார் மகேந்திர சவுத்ரி. பின்னர் புரட்சிப்படையினரால் 56 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
தற்போது பிஜியில் பிஜியின் முன்னாள் அதிபர் இலாய்லோ தலைமையில் புதிய அரசுஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டின்எதிர்ப்பால் புதிய அரசு இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
இந் நிலையில், பிஜி நாட்டின் முக்கிய தீவும், இந்திய வம்சாவளியினர் அதிகம்வசிக்கும் தீவுமான விடி லேவு தீவில் தனி ஆட்சி அமைக்கும் முயற்சியில் மகேந்திரசவுத்ரி ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது முன்னாள் அமைச்சரவைச் சகாக்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இந் நிலையில், எனது தலைமையிலான அரசு நியாயமாகவும், ஜனநாயகமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை மீண்டும் ஏற்படுத்த உலக நாடுகள்உதவவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, காமன்வெல்த் நாடுகளையும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும்மகேந்திர சவுத்ரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications