For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோஸ்டா ரிகாவில் முதியோர் இல்லத்தில் தீ - 17 பேர் சாவு
சான் ஜோஸ்:
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் இறந்தனர்.
தலைநகர் சான் ஜோஸுக்கு 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலாரன் என்றநகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புதன்கிழமை இவ் விபத்து நடந்தது.
மின் குறுக்குப் பாய்ச்சல் காரணமாக இவ் விபத்து நடந்ததாகவும், தீ வேகமாக பரவி 20நிமிடத்தில் முதியோர் இல்லம் முழுவதும் எரித்து சாம்பலானதாகவும் போலீஸார்தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது முதியோர் இல்லத்தில் எவ்வளவு பேர் இருந்தனர் என்ற சரியானவிவரம் தெரியவில்லை. எவ்வளவு பேர் காயமடைந்தனர் என்ற தகவலும் இல்லை.
போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Thursday, July 20, 2000, 5:30 [IST]