தமிழகத்தில் இன்று
கருணாநிதியின் ஆதரவு கோரும் பரூக் அப்துல்லா
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா, சென்னைக்கு வெள்ளிக்கிழமை வருகிறார்.
காலையில் வரும் அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுகிறார். மாநில சுயாட்சிக்கு கருணாநிதியின் ஆதரவை அவர்கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி கோரும் தீர்மானம் அம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இத் தீர்மானத்தை மத்திய அரசுநிராகரித்துவிட்டது.
இந் நிலையில், டெல்லிக்கு வந்த பரூக் அப்துல்லா, பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார்.
பிரதமருடன் நடந்த பேச்சு வார்த்தையில் மாநில சுயாட்சி குறித்து தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் சார்பில் குழுக்கள் அமைப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்து.
இதற்கிடையே, தனது மாநில சுயாட்சி கோரிக்கை குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி அதற்கு ஆதரவு திரட்டும் பணியில் பரூக்அப்துல்லா ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக, தமிழகம் வரும் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.