தமிழகத்தில் இன்று
வேதாரண்யம் சாமியாரின் நெய் குளியல்
வேதாரண்யம்:
கூடியிருந்த நூற்றுக்கண்கான பக்தர்கள் முன்னிலையில் கொதிக்கும் நெய்யில் குளித்து சாகசம் புரிந்தார் ஒருசாமியார்.
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் இச் சம்பவம் நடந்தது. காரைக்கால் அருகேதிருநள்ளாறில் ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருபவர் ராஜன் சுவாமிகள்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த இவர், வேதாரண்யம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபின் பக்தர்கள் முன்னிலையில்நெய்யில் குளிக்க ஏற்கனவே அறநிலையத் துறையினரிடம் அனுமதி வாங்கியிருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து அவரது தொண்டர்கள் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அடித்து வெளியிட்டிருந்தனர்.ஆனால், கடைசி நேரத்தில் நெய் குளியலுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.
இருப்பினும், இந் நிகழ்ச்சியை நடத்த ராஜன் சுவாமிகளின் தொண்டர்கள் முடிவு செய்தனர். இதற்காகவேதாரண்யம் கீழ்சன்னதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது.
வேதாரண்யம் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்ததும் மேடையில் அடுப்பு வைத்து, அதில் ஒரு பெரியபாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றினர்.
பின்னர் அது நெய்யாக உருகியதும் அங்கு கூடியருந்த பக்தர்கள் முன்னிலையில் கொதிக்க, கொதிக்க அந்தநெய்யை தனது உடம்பில் ஊற்றிக்கொண்டார் ராஜன் சுவாமிகள்.
பின்பு தீப்பந்தத்தைக் கொளுத்தி உடம்பு முழுவதும் சுட்டுக்கொண்டார். அதற்குப்பின் தேங்காயை தன் மார்பில்அடித்து உடைத்தார். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.