தமிழகத்தில் இன்று
வீராணம் திட்டத்தை "அம்போ" என்று விடுவதா?
சென்னை:
நான் கொண்டு வந்த திட்டம் என்பதால் புதிய வீராணம் குடிநீர் திட்டத்தை கருணாநிதி கை கழுவிவிட்டார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை நகரில் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், எனது ஆட்சிக் காலத்தில் உலக வங்கி ஒப்புதலுடன் ரூ.1600கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட புதிய வீராணம் திட்டத்தை கருணாநிதி புறக்கணித்துள்ளார்.
கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய வீராணம் திட்டத்தையும் நிறைவேற்றி இருந்தால் சென்னையின் குடிநீர் பிரச்சினையைமுற்றிலுமாக தீர்த்து வைத்திருக்க முடியும்.
வீராணத்தில் தொடங்கி சென்னை வரை வழிநெடுக உள்ள மக்களின் தாகத்தையும் போக்கியிருக்க முடியும். என்னுடைய அந்த நல்ல நோக்கத்தில் மண் வாரிப்போட்டவர் கருணாநிதி.
அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் எனக்கு பெருமை வந்து விடும் என்பதால்தான் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
விவசாயிகளுக்கு நன்மை அளிக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தக்க வகையில் உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டம் குறித்து 1996-ல்ஆட்சிக்கு வந்த கருணாநிதி என்ன சொன்னார்?
கிருஷ்ணா நீர் திட்டத்தால் 12 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப் போகிறது. அந்நிலையில் புதிய வீராணம் திட்டம் எதற்கென்று வசனம் பேசினார்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதே. 12 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்ததா? கருணாநிதி ஆட்சியில் நடந்த விளம்பர நாடகத்தைதவிர வேறு முன்னேற்றம் ஏதுமில்லை.
புதிய வீராணம் திட்டத்தை கை விட்டதற்கு கருணாநிதி சொன்ன காரணம் பொய்யாகி விட்டது.
விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையோடு திண்டிவனம், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை என்று தமிழகத்தின்வடபகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நான் கொண்டு வந்த புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications