தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஈ-காமர்ஸில் 2-வது இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

சிங்கப்பூர்:

இன்டர்நெட் மூலம் வர்த்தகம் (ஈ-காமர்ஸ்) மேற்கொள்வதில் உலக அளவில் வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.முதலிடத்தில் சீனர்கள் இருக்கிறார்கள்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சாலமோன் ஸ்மித் பர்னி நிறுவனம் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இன்டர்நெட் வர்த்தகத்தில் வெளிநாடுகளில் வசிக்கும்ஆசியர்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகின்றனர் என்று இதில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இன்டர்நெட் வர்த்தகத்தில், சீனர்கள் மட்டும் 686 டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர். இது 2003-வது ஆண்டில், 3.4பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு 189 மில்லியன் அளவுக்கு வர்த்தகம் புரிந்துள்ளனர். இது 2004-வது ஆண்டில் 959 மில்லியன் டாலராகஉயரலாம்.

சீனர்களும், இந்தியர்களும் இன்டர்நெட் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் முதலிடத்தைப் பெறுகிறது அமெரிக்கா.அதற்கு அடுத்த இடம் இங்கிலாந்துக்கு.

வெளிநாடுகளில் வசிக்கும் ஆசியர்கள்தான் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே சமயத்தில், ஆசியக் கண்டத்திலேயே வசிக்கும் ஆசியர்கள்இன்டர்நெட்டை அதிகம் கையாளுவதில்லை.

சீனர்கள், இந்தியர்கள் தவிர இன்டர்நெட் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்நாட்டவர்கள்தான்.

இன்டர்நெட் வர்த்தகத்தில் மிகப் பெரிய மார்க்கெட் இந்த ஆசியர்களின் கையில்தான் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+