தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இன்ஜினியரிங் கல்லூரி கவுன்சிலிங் ஒத்திவைப்பு

சென்னை:

தமிழ்நாட்டில் புதன்கிழமை நடப்பதாக இருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பானகவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநில உயர் கல்விச் செயலர் மணிவண்ணன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் ஜூலை 26 தேதிநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் உள்ள இடங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவுசெய்து அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், அண்ணா பல்கலைக் கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள பல பொறியியற் கல்லூரிகள் கூடுதல் இடங்கள்கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிடும். கூடுதல்இடங்களை ஒற்றைச் சாளர முறையில் கொண்டு வரும் நோக்கில் கவுன்சிலிங் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாற்றப்பட்ட கவுன்சிலிங் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+