தமிழகத்தில் இன்று
வயிற்றுக்குள் ஆணுறை ... அதற்குள் ரூ. 10 லட்சம் வைரக் கற்கள்
சென்னை:
வயிற்றுக்குள் ஆணுறையை வைத்து அதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களைக்கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்திற்கு கொழும்புவிலிருந்து ஒரு விமானம்ஞாயிற்றுக்கிழமை வந்தது. அதில் வந்த ஒரு பயணி குறித்து சுங்கத் துறைஅதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் பரிசோதனைநடத்தப்பட்டது.
வயிற்றுக்குள் அவர் ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்டஅதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஆணுறை இருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தினர். அதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்கள் ஆணுறைக்குள் இருப்பதாக அந்த நபர்தெரிவித்தார்.
அவரது பெயர் முகம்மது நாஹா என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும்விசாரணையில் தெரிய வந்தது. அறுவைச் சிகிச்சை செய்து வைரக் கற்களைஎடுப்பதற்காக அந்த நபர் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications