For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தொடர்ந்து "நடுங்கும்" ஜப்பான்

டோக்கியோ:

ஜப்பானில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் நாடே பாதிப்பில் உள்ளது.

ஷிகினெஜிமா, கோஸுஷிமா தீவுகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டெர் அளவு கோளில் 5.9 என்று பதிவான இந்தநிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், முழுமையான விவரங்கள் தெரிவில்லை.

ஆனால், இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டெர் அளவு கோளில் 5 என்று பதிவாகி மக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டிருந்தால் கடுமையான உயிர்ச்சேதம் ஆகியிருக்கும்என்று மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த திங்கள்கிழமை முதல் ஜப்பானின் இஸு தொடர் தீவுகள் பகுதியில் இதுவரை 20-க்கும் அதிகமான லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள்ஏற்பட்டு வருகின்றன. இதுவரை பெரிய நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றாலும், பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஜப்பானுக்கு அருகே கடலுக்கு அடியில் உள்ள ஒரு எரிமலை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி வெடித்தது. மேலும் மியாகேஜிமா தீவில் உள்ள ஓயாமாஎன்ற எரிமலை ஜூலை 8 மற்றும் 14-ம் தேதிகளில் வெடித்தது. அது முதல் ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

சமீப காலத்தில் இதுவரை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுங்களில் கோஸுஷிமா தீவில் ஜூலை 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் இறந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. அந் நிலநடுக்கம் ரிச்டெர் அளவு கோளில் 6.4 என்று பதிவானது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X