தமிழகத்தில் இன்று
போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்க வருகிறது போர்டு
டெல்லி:
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம்ஈடுபட்டுள்ளது.
இத் தகவலை ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம்) டென்னிஸ் ஷுயெட்ஸெல் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், அந்த நகரங்களில் காற்றின் தன்மையும் மிகவும் மோசமாகஉள்ளது.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட ஃபோர்டு மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து இப்பணி மேற்கொள்ளப்படும்.
மக்களுக்குப் பயன்படும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தியாவுக்கென தனி போக்குவரத்து முறை மற்றும் உள் கட்டமைப்புகள்பற்றிய சீரிய திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கும்படி ஹார்வார்டு பல்கலைக் கழகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு அப் பல்கலைக் கழகத்துக்கு இத் திட்டம் தயாரிப்பதற்காக நிதி உதவி அளிக்கப்படும் என்றார் ஷுயெட்ஸெல்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications