தமிழகத்தில் இன்று
அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்கிறார் திருநாவுக்கரசு
சென்னை:
மத்திய அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் நடந்த கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில்திருநாவுக்கரசு பேசியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும்கூட அமைச்சர் பதவி ஏதும் தரப்படாததுகுறித்து கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

ஒரு எம்.பியை மட்டுமே கொண்டிருந்த தமிழக ராஜீவ் காங்கிரஸ், மேனகா காந்திஆகியோர் அமைச்சர் பதவியை வைத்திருந்த நிலையில் நமது கட்சி சார்பில் நான்அமைச்சராக வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால்எம்.பியாக இருக்கிறேன் என்ற காரணத்துக்காக அமைச்சர் பதவிக்கு நான்ஆசைப்படவில்லை.
அடக்கத்தை விரும்புபவன் நான். ஒவ்வொரு அடியையும் அளந்து வைததுக்கொண்டிருக்கிறேன். எனது நிலை என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
எம்.ஜி.ஆர். குறித்து யார், யாரோ என்னவெல்லாமோ கூறிக் கொண்டிருக்கிறார்கள்.களங்கப்படுத்தி எழுதுகிறார்கள். முன்னாள் டி.ஜி.பி.வைகுந்த் எம்.ஜி.ஆர் குறித்துத்தவறாகவும், தரக்குறைவாகவும் புத்தகம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டவர் அவர். நல்ல பதவிஅவருக்குக் கிடைத்ததில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications