தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வன்னியர் சங்கக் கொடியை அகற்ற 2 பா.ம.க. தொண்டர்கள் கைது
அரியலூர்:
அரியலூரில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஏற்றி வைத்த வன்னியர் சங்கக் கொடியை அகற்றியது தொடர்பாக இரண்டுபாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சக்தி (23), சரவணன் (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டவர்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியும், டாக்டர் ராமதாஸ்தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அடிக்கடி சண்டையிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications