For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

போலீசாரை மிரட்டிய 11 கைதிகளுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்

கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 11 கைதிகளுக்கு, போலீசாரை மிரட்டிய வழக்குத் தொடர்பாககுற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.

இதே போன்று, ஜெயில் வார்டனைத் தாக்கிய வழக்கில் இரண்டு பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள்வழங்கப்பட்டன.

கோவை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கடந்த 1999ம் ஆண்டு,இன்ஸ்பெக்டர் முருகசாமி அழைத்து வந்தார். அப்போது சில கைதிகள் முருகசாமியை தகாத வார்த்தைகளால்திட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 11கைதிகளுக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.

இதே போன்று கடந்த 1998ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் ஜெயில் வார்டன் அசோக்குமார் தாக்கப்பட்டார்.இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டுள்ள 2 பேருக்கு புதன்கிழமை குற்றப்பத்திரிக்கைநகல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி மற்றும் ஹக்கீம், இப்ராகிம் ஆகியோர் மீது ஜெயில்வார்டனைக் கொல்ல முயன்றதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மதானி உடல் நலக் குறைவுகாரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, ஹக்கீம் மற்றும் இப்ராகிம் ஆகியோருக்கு நீதிபதிசர்வமங்கலம் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X