தமிழகத்தில் இன்று
தீவிரவாதிகள் போர் நிறுத்தத்தை இந்தியா கண்காணிக்கும் என்கிறார் மிஸ்ரா
வாஷிங்டன்:
ஜம்மு காஷ்மீரில் ஹிஜ்புல் மூஜாஹுதின் தீவிரவாதிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை இந்தியா தீவிரமாக கண்காணிக்கும் என்று
பிரதமரின் முதன்மைச் செயலாளரும், பாதுகாப்பு ஆலோசகருமான பிரிஜேஷ் மிஸ்ராதெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் கிளின்டன் இந்தியா வந்திருந்தபோது வாஜ்பாயை அமெரிக்காவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் செப்டம்பர் மாதம்அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
பிரமதமரின் பயணம் குறித்த ஏற்பாடுகளை கவனிக்க பிரிஜேஷ் மிஸ்ரா அமெரிக்காசென்றுள்ளார். வாஷிங்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூஜாஹுதின்தீவிரவாதிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் சரியான முறையில்அமல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பது குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்துவருகிறது.
இந்தியாதான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றுபாகிஸ்தான் கூறுவது தவறு. பாகிஸ்தானுடன் பேச்சு வார்ததை நடத்த எந்த நாட்டின்அனுமதியும் தேவையில்லை.
நட்பு நோக்கத்துடன்தான் லாகூர் பஸ் பயணத்தை இந்தியா மேற்கொண்டது. ஆனால்பாகிஸ்தான் அதை தவறாக பயன்படுத்தி தீவிரவாதிகளை எல்லை கடந்து கார்கிலுக்குஅனுப்பி போரை உண்டாக்கிவிட்டது.
எல்லையைக் கடந்து தீவிரவாத நட்வடிக்கையில் ஈடுபடுவதை முதலில் பாகிஸ்தான்நிறுத்த வேண்டும். அப்போதுதான் பேச்சு வார்த்தை சாத்தியம். எனவேபேச்சுவார்த்தையைத் துவங்குவது பாகிஸ்தானின் கையில்தான் உள்ளது என்று மிஸ்ராகூறினார்
எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கையை குறைத்துக்கொண்டுள்ளதா என்று கேள்விக்கு மிஸ்ரா இல்லவே இல்லை என பதிலளித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சாமுவேல் பெர்ஜர், இடைக்காலவெளியுறவுத்துறை அமைச்சர் தாமஸ் பிக்கரிங் மற்றும் பல உயர் அதிகாரிகளையும்மிஸ்ரா சந்தித்து பேச உள்ளார்.
யு.என்.ஐ.