தமிழகத்தில் இன்று
பேராசிரியரின் பேராசைக்குப் பலியான மாணவி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கல்லூரிப் பேராசிரியரின் ஆசைக்கு இணங்க மறுத்த எம்.எஸ்சி மாணவி பெயிலாக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் பொன்னுராஜ். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் ராதா. 1998 ம் ஆண்டு வந்தவாசியிலுள்ள அகிலாண்டேஸ்வரிகல்லூரியில் ராதா எம்எஸ்சி வகுப்பில் சேர்ந்தார்.
கல்லூரியில் சேர்ந்த நாள் முதல், கல்லூரி நிர்வாகம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாலும், விடுதியில் அதிகப் பிரச்சனைகள் இருந்ததாலும்ராதாவின் பெற்றோர் அவருக்கு கல்லூரி அருகிலேயே வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்தனர்.
விடுதியிலிருந்து விலகியதால் ராதா கல்லூரி நிர்வாகத்தின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டாள். ராதாவின் கல்லூரி பேராசிரியர் காளிதாஸ் ராதாவிடம்தவறாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது விருப்பத்திற்கு இணங்குமாறும், இல்லாவிட்டால் செய்முறைத் தேர்வில் மதிப்பெண்கள் போடாமல்பெயிலாக்கி விடுவேன் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ராதா, கல்லூரி முதல்வர் சாவித்திரி தேவராஜிடம் புகார் கொடுத்தார். ஆனால், முதல்வரோ, மதிப்பெண் போட வேண்டுமானால் ஒருபாடத்திற்கு 4,500 ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார். ராதா பணம் கட்டவில்லை. இதையடுத்து அவர் பெயிலாக்கப்பட்டார்.
இது குறித்துக் கேட்பதற்காக ராதாவின் தாய் சரஸ்வதி திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் அவரை அடித்ததாகத் தெரிகிறது.இதற்குக் கல்லூரி தாளாளர் சுகுணா உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கல்லூரி மாணவி ராதாவின் பெற்றோர் திருவண்ணாமலை போலீசில் புகார்கொடுத்துள்ளனர்.