தமிழகத்தில் இன்று
ஹூசைனியைக் கொடுமைப்படுத்தவில்லை...சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை:
சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது போலீஸார் அடித்து துன்புறுத்தினார்கள் என்று கராத்தேஹூசைனி புகார் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று நகர போலீஸ் கமிஷனர் பி.காளிமுத்து நிருபர்களிடம்தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
மதுரையைச் சேர்ந்த ஹூசைனி எம்.ஏ. பட்டம் பெற்றவர். அவர் அண்மையில் ஹைபுரொபைல் என்ற அமைப்பைஏற்படுத்தினார். அதில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ 3500 உதவித்தொகை வழங்கப்படும் என்றுபத்திரிக்கைகளில் கவர்ச்சியான முறையில் விளம்பரங்கள் செய்திருந்தார்.
இவரை நம்பி ஏராளமான பெண்கள் உள்பட பலர் இவரது ஹைபுரொபைல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர்.ஆனால், பயிற்சி பெறுபவர்கள் யாருக்கும் இவர் உதவித்தொகை கொடுக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்டவர்களை அடித்து கொடுமைப்படுத்தினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீஸ் அவரைக் கைது செய்தது. போலீஸ்நிலையத்தில் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரால் பூட்ஸ் காலால் அடித்து உதைத்துக்கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அவருக்குக் குடிப்பதற்கு சிறுநீர் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுவதெல்லாம்அப்பட்டமான பொய்.
மாநில அரசு, போலீஸ், மற்றும் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகத் தான் அவர் இப்படியெல்லாம்கூறுகிறார். இவர் மீது சட்டம் தனது நடவடிக்கையை எடுக்கும் என்றார் கமிஷனர்.
இதற்கிடையே ஜாமினில் வெளிவந்துள்ள ஹூசைனி கூறுகையில், போலீஸார் தனக்கெதிராக எப்.ஐ.ஆர். பதிவுசெய்து, குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். தனக்கு ஏதாவது ஆபத்துஏற்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.