தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நேபாள விமான விபத்தில் 25 பேர் பலி

காத்மாண்டு:

நேபாளத்தில் ராயல் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 22பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இறந்தனர்.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள டாடெல்துரா மாவட்டத்தில் இவ் விபத்துநேர்ந்தது.

கனடாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 25 பேருடன் பஜாஹாங் என்றஇடத்திலிருந்து தன்காதி என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்தபோதுவிபத்துக்குள்ளானது.

பஜாஹாங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 3 நிமிடங்களில் அருகில் உள்ளமலைப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லைஎன்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

விமானத்தில் 3 சிறுவர்கள் உள்பட 22 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள்தெரிவித்தனர். விபத்துக்கு மோசமான பராமரிப்பு காரணமாக இருக்கலாம் என்றுகருதுவதாக அவர்கள் கூறினர்.

இரு நாட்களுக்கு முன்புதான் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே ஏர் பிரான்ஸ்நிறுவனத்துக்குச் சொந்தமான கான்கார்டு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில்அதில் இருந்த 109 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+