For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தேயிலை விவசாயிகள் சாலை மறியல் தொடர்கிறது

கோவை:

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் 3-வது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தொடர்ந்தால் சட்டம் தனது கடமையைச் செய்யும் என நீலகிரிக்கு விரைந்துள்ள தமிழக கூடுதல்டி.ஜி.பி. குமாரசாமி எச்சரித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் ஆதார விலை அறிவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக நீலகிரியில் உள்ளஎல்லநள்ளியில் சாலை மறியல் நடந்தது. புதன்கிழமையும் இந்த சாலை மறியல் தொடர்ந்தது.

இதனால், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க தமிழக சட்டம் ஒழுங்கு ஐ.ஜி சுப்பையா,ஏ.டி.ஜி.பி குமாரசாமி, நீலகிரி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணர்த்தி, மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி, தாமரைக்கண்ணன் ஆகியோர் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும்., கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து அதிவிரைவுப் படைப் போலீசாரும் தயார் நிலையில்நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் பதட்டமான சூழ்நலை நிலவி வருகிறது.

அதே சமயம், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடந்து வரும் சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் இரண்டு நாட்ளாக 22 விவசாயிகள்உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு நிலவும் போராட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய ஏ.டி.ஜி.பி குமாரசாமி,போராட்டம் தொடருமானால், சட்டம் தனது கடமையைச் செய்யும் என எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X