தமிழகத்தில் இன்று
நீலகிரியில் தேயிலை விவசாயிகள் மீது தடியடி
கோவை:
நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற தேயிலை விவசாயிகள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசினர். 400-க்கும்மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சிறு தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே நடந்த சாலை மறியலால்போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நேரில் கவனிக்க தமிழக ஐ.ஜி., சுப்பையா, ஏ.டி.ஜி.பிகுமாரசாமி , கோவை மண்டல டி.ஐ.ஜி.,ராஜேந்திரன் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.
நீலகிரியில் வியாழக்கிழமை நடக்கும் சாலை மறியலைத் தடுத்து நிறுத்த போலீசார் ஆயத்தமாயினர். காலையில் விவசாயிகள் சாலை மறியல் நடத்ததிட்டமிட்ட இடத்தை அறிந்து அங்கு விரைந்தனர். கேத்திக்கும், எல்லநள்ளிக்கும் இடையே கூடிய விவசாயிகளிடம் போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர்.விவசாயிகள் மறுக்கவே, லத்தியால் தாக்கத் துவங்கினர். கூட்டத்தினரைக் கலைக்க முடியாததால், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக்கலைத்தனர்.
பின்னர், பல இடங்களில் சாலைமறியல் செய்ய முயன்ற விவசாயிகள் 400 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி முதல்சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட 22 விவசாயிகளையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications