தமிழகத்தில் இன்று
போர் தொடுக்கும் தைரியம் பாக்.கிற்கு இல்லை என்கிறார் பெர்னாண்டஸ்
டெல்லி:
இந்தியா மீது பெரிய அளவில் போர் தொடுக்கும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லைஎன்று லோக சபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்
பெர்னாண்டஸ் கூறினார்.
லோக் சபாவில், கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லையில் 94 தீவிரவாத பயிற்சி முகாம்கள்உள்ளன. இங்கு 3000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களால் இப்போதைக்கு இந்தியாவுக்கு ஆபத்து ஏதும் இல்லை.
தீவிரவாதிகளிடம் தற்போது அதி நவீன ஆயுதங்கள் உள்ளன. மேலும் பல ஆயுதங்ளைவாங்கிக் குவிப்பதில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தானியங்கித்துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கை ஏவுகனைகள், வெடிபொருட்கள்ஆகியவற்றை இவர்கள் வைத்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியபாதுகாப்புப் படையினர் எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் எத்தகையநடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதை முறியடிக்க இந்தியா தயாராக உள்ளது என்றார்பெர்னாண்டஸ்.
யு.என்.ஐ.