For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் இந்திய முகங்கள்

ஜொகான்னெஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் காலியாக உள்ள 2 பதவிகளுக்கு மூன்று தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.

சனிக்கிழமை நடைபெற உள்ள இத் தேர்தலில் முஸ்தபா கான், கூலம் அல்லி, எஸ்.கே. ரெட்டி ஆகிய மூன்று தென் ஆப்பிரிக்க இந்தியர்கள்போட்டியிடுகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதால் இதுவரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தேர்வுக் குழுவில் தென ஆப்பிரிக்கஇந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இது தொடர்பான தேர்தலில் போட்டியிடவும் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இப்போது நிறவெறிக் கொள்கையை தென் ஆப்பிரிக்க அரசுகைவிட்டுவிட்டது.

இதையடுத்து கிரிக்கெட் தேர்வுக் குழுத் தேர்வில் தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் போட்டியிட உள்ளனர்.

இது தவிர, 6 பேர் கொண்ட உள்நாட்டுக் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் புதிதாகத் தேர்வு செய்யப்படவுள்ள 4 பேரில் மோரீஸ் கார்டா என்ற தென்ஆப்பிரிக்க இந்தியரும் அடங்குவார்.

இத் தேர்வுகளில் ஆச்சரியப்படும் விதமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கிளைவ் ரைஸ், கெப்ளர் வெஸல்ஸ் இருவரும்வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வெஸல்ஸ் கூறுகையில், பெயர் நீக்கப்பட்டது எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை. ஏனெனில், நான் வேறு பணிகளில் கவனம் செலுத்த ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டேன் என்றார் வெஸல்ஸ்.

தென் ஆப்பிரிக்க 19 வயதுக்குப்பட்டோர் அணி தேர்வுக் குழுவிலும் சோல்லி சோடியா, எல். நாயுடு என்ற இரு தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக் கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் குழுவும் சனிக்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X