தமிழகத்தில் இன்று
முற்றியது த.மா.கா. பூசல்...சென்னை விரைந்தார் கோவை மேயர்
கோவை:
கோவை தமிழ் மாநில காங்கிரசில் நிலவும் கோஷ்டி மோதல் குறித்து ஆலோசனை நடத்த மேயர் கோபாலகிருஷ்ணன் சென்னை சென்றுள்ளார்.
கோவை தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கோவை தங்கம், மற்றும் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடைய நிலவும்கோஷ்டி மோதல் முற்றியுள்ளது. கோவை தங்கத்தை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் போர்க் கொடிதூக்கியுள்ளனர். இதனை வலியுறுத்தி ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
வட்ட அளவில் நடந்து வந்த கூட்டங்களில் மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கி அடிதடியில் முடிந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் இந்த கோஷ்டி மோதலில் 3 பேர் முக்கிய பொறுப்புகளிலிருந்து ராஜினமா செய்தனர். கடைசியாக ஜூலை 26ம் தேதிமாநகர் மாவட்ட செயலர் பொறுப்பு வகித்து வரும் செல்வம் ராஜினாமாக் கடிதத்தை மூப்பனாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சண்டையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மேலிடத்தைச் சந்திக்க தமிழ்மாநில காங்கிரசைச் சேர்ந்த மேயர் கோபாலகிருஷ்ணன் சென்னைவிரைந்துள்ளார். அங்கு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்தித்து முறையிட்டுள்ளார். பூசலைத் தீர்க்க த.மா.கா தலைவர் மூப்பனாரையும் சந்தித்துபேசுகிறார்.












Click it and Unblock the Notifications