தமிழகத்தில் இன்று
டெல்லியில் மாநிலங்களிடை தடகளப் போட்டிகள்
சென்னை:
மாநிலங்களுக்கு இடையேயான அதலெடிக்ஸ் போட்டிகள் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன.
சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு இப் போட்டிகள் நடைபெறும். அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்கின்றனர்.
ஜகார்த்தாவில் ஆசிய தடகளப் போட்டி விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சிட்னியில் செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறஉள்ளது.
இந்த இரு போட்டிகளிலும் கலந்து கொள்ள தகுதி பெற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இதுதான் கடைசி தகுதிப் போட்டி என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆகவே, அனைத்து மாநில வீரர் மற்றும் வீராங்கனைகளும் சர்வதேச போட்டிகளுக்குத் தகுதி பெற இப் போட்டியில் தங்களது முழு திறமையைக் காட்டஉள்ளனர்.
இந்திய அமெச்சூர் தடகள அமைப்பு சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. இந்த தகுதிகளை எட்டும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே சர்வதேசபோட்டிகளுக்கு அனுப்பப்படுவர்.
டெல்லியில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியின் கடைசி நாளன்று ஜகார்த்தா போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே சிட்னி ஒலிம்பிக்குக்கு 60 பேர் கொண்ட இந்திய அணி பங்கு கொள்ளும் என்றும் அதில் 20 முதல் 22 பேர் தடகளப் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், ஜகார்த்தா போட்டிக்கு தகுதி வாய்ந்த வீரர் மற்றும் வீராங்கனைத் தேர்வு செய்யகூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார் தமிழ்நாடு அமெச்சூர் அதலெடிக் சங்கத் தலைவர் டபிள்யு.ஐ. தேவாரம் தெரிவித்தார்.
இந்திய அமெச்சூர் அதலெடிக் சங்கம் நிர்ணயித்துள்ள தகுதிகளை பல வீரர் மற்றும் வீராங்கனைகள் எட்டியுள்ளனர் என்றாலும், டெல்லியில் நடைபெற உள்ளபோட்டி அவர்களுக்கு கூடுதல் பயிற்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் போட்டியில் தேசிய சாதனைகளும், மாநிலங்களுக்கு இடையேயான பல புதிய சாதனைகளும் ஏற்படுத்தப்படும் என்றுநம்பப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications