தமிழகத்தில் இன்று
பால் தாக்கரேவின் குற்றம் 1993-ல் நடந்தது. இப்போது ஏழு வருடமாகிறது. ஆகையால்தான் இது காலக்கெடுவைக் கடந்தது என்றும்,நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ராம் ஜெத்மலானியும், அருண் ஜேட்லியும் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இது பாதி உண்மைதான். மீதிப் பாதியைப் பார்ப்போம்.
மூன்று வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை பெறக் கூடிய குற்றங்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதற்கு, எந்தக் காலக் கெடுவையும் சட்டம்விதிக்கவில்லை.
பால்தாக்கரே மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு, மூன்று வருடத்திற்கு மேலாக சிறைத் தண்டனை பெறக்கூடிய குற்றத்தைச் சுமத்தினால், அதுஇந்தக் காலக்கெடு நிர்பந்தத்தில் சிக்காது.
இது ஒருபுறமிருக்க, மூன்று வருட சிறைத் தண்டனை பெறக்கூடிய குற்றம் தான் அவர் மீது சுமத்தப்படுகிறது என்றே கூட வைத்துக் கொள்வோம். காலம்தாழ்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிற போது, கால தாமதம் நேரிட்டதற்கான காரணங்களை அரசு தரப்பு விளக்கும்.
அந்த விளக்கத்தை நீதி மன்றம் ஏற்கலாம். தவிர, நீதி நிலை நாட்டப்படுவதற்கு வழக்கு நடப்பது அவசியம் என்று நீதிமன்றம் நினைக்கலாம்.நீதிமன்றத்தின் பார்வை அப்படி அமைந்தால், காலக்கெடு கடந்துவிட்டது என்ற ஆட்சேபம் செல்லுபடியாகாது.
அதாவது நீதிமன்றம் அனுமதித்தால்,காலம் தாழ்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளும் சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெறும். இந்த உண்மைகளை ராம்ஜெத்மலானியும், அருண் ஜேட்லியும் கூறவில்லை.
குற்றம் சுமத்தப்படுகிற பால் தாக்கரேவின் பிடிக்குள் இருந்த சிவசேனை - பா.ஜ.க,. அரசு, இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமலே இருந்தது.தன் செல்வாக்கிற்கு அடங்கிய ஆட்சியைப் பயன்படுத்தி, தன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திய பால் தாக்கரே, இப்போதுதாமதமாகி விட்டது என்ற ஆட்சேபணையை எழுப்புவது ஏற்கப்படக் கூடியது அல்ல.
மதக் கலவரத்திற்குக் காரணமானவர்களும், அதைத் தூண்டி விட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது தான் பொது நன்மைக்கு உகந்தது என்றுப்ராசிக்யூஷன் தரப்பு வாதாடினால், நீதிமன்றம் இந்த விளக்கத்தை ஏற்கக் கூடிய வாய்ப்பு உண்டு. அப்போது காலக்கெடு மீறப்பட்டது என்ற சுமை இந்தவழக்கை பாதிக்காது.
சட்டத்தின் நிலை இப்படியிருக்க, பால் தாக்கரே போன்றவர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து, கூட்டணி ஆயுளை நினைத்து கவலை கொண்டு, நியாயத்திற்குவிரோதமாக இயங்கத் தொடங்குவது,- பா.ஜ.க. வின் நற்பெயருக்கு நல்லதல்ல.
தன்னுடைய அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்களை பா.ஜ.க.சகித்துக் கொள்ளலாம் - சமூக விரோத செயல்களில்ஈடுபடுவதைப் பெருமையாக நினைக்கிற பால் தாக்கரேயும் சகித்துக் கொள்ளலாம்.
ஆனால், பா.ஜ.க. வின் இந்த அலாதியான சகிப்புத்தன்மை, மற்றவர்களின் பொறுமையைச் சோதிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் தான் சுப்ரீம்கோர்ட் ஒரு நாகரிகமான அரசு செயல் படுகிற விதம் இதுவல்ல என்று கூறி, இவ்விஷயத்தில் பா.ஜ.க.வின் தடுமாற்றத்தைச் சாடியிருக்கிறது.
மக்களின் பொறுமைக்கும் ஒரு காலக்கெடு உண்டு. அதை மீறுவது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications