தமிழகத்தில் இன்று
"போர் நிறுத்தத்தை விமர்சிக்க பாகிஸ்தான் கட்சிக்கு உரிமையில்லை
டெல்லி:
போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மதவாதக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமிஅமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளதை ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் போர்உத்திகளுக்கான ஒருங்கிணைப்பாளர்அப்துல் மஜீத் தர் கண்டித்துள்ளார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு மூன்று மாதங்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாகசமீபத்தில் அறிவித்தது. இந்திய ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மூன்றுமாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அது அறிவித்தது. இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்தபல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஜமாத் இ இஸ்லாமி இயக்கமும் கண்டித்தது.
இதுதொடர்பாக தர் பி.பி.சியின் உருதுச் செய்தியில் கூறுகையில், பல மாத தீவிரஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்திய ராணுவத்தின் தீவிரமானதாக்குதலும், அமெரிக்காவிலிருந்து அதிகரித்த நெருக்கடியுமே இந்த முடிவுக்குக் காரணம்.
ரத்தக் களறியை நாங்கள் விரும்பவில்லை. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்குத் தேவையானசூழ்நிலையை உருவாக்க விரும்பினோம். இதை எங்களது பிற தோழர்களும் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.
ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தீவிரவாதப் பிரிவுதான் ஹிஸ்புல் முஜாஹிதீன். திடீரெனஇந்த அமைப்பு போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ளதால், ஜமாத் இ இஸ்லாமி அமைப்புபெரும் அதிர்ச்சியில் உள்ளது. ஜமாத் இ இஸ்லாமியின் தலைவர் குவாசி ஹுசைன்இதுகுறித்துக் கூறுகையில், தர், எங்களிடம் போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனைகேட்கவில்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications