தமிழகத்தில் இன்று
மக்கள் அதிருப்தியைச் சந்தித்த நீலகிரி போலீஸ்
கோவை:
நீலகிரியில் அமைதி ஏற்படத் தொடங்கியிருந்தாலும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
கடந்த ஒரு வார காலமாக தேயிலை விவசாயிகள் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்து.தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. முதன் முறையாக கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடியையும்பொதுமக்கள் சந்தித்துள்ளனர். இதனால் போலீஸ் மீது பொதுமக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள ஏ.டி.ஜி.பி., குமாரசாமி பொதுமக்களை சமாதானப்படுத்தும் வகையில்,போலீசார் உங்கள் நண்பன், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஒத்துழைக்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், எதிர் கட்சித் தரப்பில் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த ஒருவார காலமாக அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் பெருமளவில்பாதிக்கப்பட்டனர். தற்போது பஸ்கள் ஓடத் தொடங்கியுள்ளன. ஜூலை 31ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுவழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.