தமிழகத்தில் இன்று
சென்னை விரைந்தனர் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்
கோவை:
கோவையில் 7 வது நளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரிமாணவர்கள் சார்பாக, பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவைச் சந்திக்கசென்னை சென்றனர்.
சட்டக் கல்லூரி துவக்க தனியாருக்கு அனுமதிக்கக் கூடாது எனக் கோரி, கடந்த ஒருவார காலமாக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களில் 23 மாணவர்கள் மயக்கமடைந்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், ஒருவர் ஜூலை 30-ம் தேதி மயக்கமடைந்தார். இவரும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர்களின் உண்ணாவிரதத்தைக் கைவிட, மாவட்ட கலெக்டர் சமரச முயற்சியில்ஈடுபட்டும் தோல்வியே கிடைத்தது. எனவே, இப்பிரச்னை குறித்து விவாதிக்கமாணவர் பிரதிநிதிகள் 8 பேர் அமைச்சர் ஆலடி அருணாவைச் சந்திக்க சென்னைசென்றனர்.












Click it and Unblock the Notifications