For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

வீரப்பன் விவகாரம்: கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்உள்பட அனைவரையும் மீட்க கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் மேற்கொள்ளும்அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவும் என்று மத்திய கலாசார மற்றும்சுற்றுலாத் துறை அமைச்சர் அனந்த் குமாரும், மத்திய நுகர்வோர் துறை இணைஅமைச்சருமான சீனிவாசராவ் இருவரும் கூறினர்.

நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றதைஅடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்தியஉள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியின் உத்தரவின்பேரில் இருவரும்மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை மாலை சென்னை வந்தனர்.

விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

ராஜ்குமாரையும் அவருடன் கடத்தப்பட்டுள்ள மற்றவர்களையும் மீட்கும்நடவடிக்கையில் கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.ஏற்கெனவே இரு மாநில முதல்வர்களும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ராஜ்குமாரை மீட்க இரு மாநில அரசுகளும் மேற்கொள்ளும் அனைத்துநடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவியாக இருக்கும். இது தொடர்பாக இருமாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது.

நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைப்பட்டால்ராஜ்குமாரைத் தேடும் பணியில் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்பவும் மத்தியஅரசு தயாராக உள்ளது.

ஒரு தூதரை 8 நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என்று வீரப்பன் கோரியுள்ளான்.இக்கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே அரசுத் தூதராக வீரப்பனைச் சந்தித்த நக்கீரன்பத்திரிகை ஆசிரியர் கோபாலிடம் தமிழக முதல்வர் கருணாநிதி பேச்சு நடத்திவருகிறார்.

இப் பிரச்சினையில் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து கருணாநிதியுடன் பேச்சுநடத்த வந்துள்ளோம் என்று இரு அமைச்சர்களும் கூறினர்.

பின்னர் இருவரும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்குச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X