தமிழகத்தில் இன்று
பெங்களூரில் தமிழ் செய்தித்தாள் அலுவலகங்கள் மீது தாக்குதல்
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து பெங்களூரில் வன்முறை மூண்டது.பல தமிழ் நாளிதழ்களின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன.
பெங்களூர் நகரின் பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது. கடைகள்வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. சாலைகளில் சென்ற வாகனங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
தமிழர்களின் கடைகள் மற்றும் பிற இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.பெங்களூரிலிருந்து இயங்கி வரும் பல தமிழ்ப் பத்திரிகை அலுவலகங்களும்தாக்குதலிருந்து தப்பவில்லை.
தினத்தந்தி அலுவலகம் கடுமையாகத் தாக்கப்பட்டது. அலுவலகத்திற்குள் 150-க்கும்மேற்பட்டோர் அடங்கிய வன்முறைக் கும்பல் நுழைந்து சூறையாடியது. ஒருஸ்கூட்டரும் எரிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.
காலைக் கதிர், தினமணி ஆகிய பத்திரிகைகளின் அலுவலகங்களும் தாக்கப்பட்டன.நகர் முழுவதிலும் வன்முறையாளர்கள் டயர்களை எரிப்பது, கல்வீச்சு ஆகியவற்றில்ஈடுபட்டுள்ளனர்.
நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.