தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கர்நாடகாவில் பதட்டம்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தலால், கர்நாடகம் முழுவதிலும் பரபரப்பான சூழ்நிலைநிலவுகிறது.
கன்னட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராஜ்குமார், வீரப்பன் மற்றும் அவனதுகும்பலால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்டார். அவரது மனைவி பர்வதம்மாவிடம், வீரப்பன் கும்பல் ஆடியோகேசட் ஒன்றைக் கொடுத்து விட்டுத் தப்பியது.
இந்த நிலையில், ராஜ்குமார் கடத்தப்பட்ட செய்தி கர்நாடகம் முழுவதும் வேகமாகபரவியது. தலைநகர் பெங்களூர் உள்பட பல பகுதிகளில் வன்முறைச் செயல்கள்நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
பெங்களூரின் பல பகுதிகளில் பந்த் அனுசரிக்கப்படுகிறது. கடைகள், வர்த்தகநிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டடுள்ளன.
பெங்களூர் உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications