For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

By Staff
Google Oneindia Tamil News

அதிரடிப்படையால் வீரப்பனைப் பிடிக்க முடியாது

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து பலருக்கும், பலவிதமான கருத்து இருந்தாலும்,அவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை,திட்டமிடுதலில் தலை சிறந்தவன் வீரப்பன்.

வீரப்பனின் திட்டமிடுதலைப் பாராட்டும் காவல்துறை அதிகாரிகள், அவனைப்பிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து எந்தவித யுத்தியும் இல்லாமல் கையைப்பிசைந்து கொண்டுள்ளனர்.

1995-ம் ஆண்டு திம்பம், பாலார் பகுதிகளில் நடந்த வீரப்பன் தேடுதல் வேட்டைக்குத்தலைமை தாங்கியவர் பெங்களூர் நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.சி.பர்மன்.தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை மூலம் வீரப்பனைப் பிடிக்க முடியாது என்கிறார்பர்மன்.

பர்மன் கூறுகையில், வீரப்பன் மறைவிடம் குறித்துத் தங்களுக்குக் கிடைக்கும்தகவல்களை தமிழக அதிரடிப் படை வீரர்களிடம் கர்நாடக வீரர்கள் தெரிவிப்பர்.அதைப் பெற்றுக் கொண்டு, தமிழக வீரர்கள்

செயல்படுவதற்குள் வீரப்பன் தப்பித்திருப்பான்.

வீரப்பனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு என்பதே கிடையாது.கூட்டு அதிரடிப்படை வீரர்கள் அவரவர் மாநில உயர் அதிகாரிகளின்உத்தரவின்பேரில்தான் செயல்படுகின்றனர்.

பலமுறை, வீரப்பன் இருப்பிடம் வரை சென்றும், அவன் தப்பித்திருக்கிறான். சரியானதகவல் பரிமாற்றம் இல்லாததே இதற்குக் காரணம் என்றார் பர்மன்.

கர்நாடக அதிரடிப் படையில் இருந்த இன்னொரு அதிகாரியான கோபால் ஒசூர்கூறுகையில், வீரப்பன் என்ன செய்வான் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். அவன்இருக்கும் காடு முழுவதும் வீரப்பனுக்கு அத்துப்படி. அந்தக் காட்டின் ராஜா அவன்.அவனுக்கு இணையாக யாருமே வர முடியாது. அப்படிச் செயல்படுகிறான் வீரப்பன்என்கிறார்.

1993-ம் ஆண்டு வீரப்பின் நடத்திய தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்ஒசூர். அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்தார் ஒசூர். 93-ம் ஆண்டு மே24-ம் தேதி மாதேஸ்வரா மலையிலிருந்து, மைசூருக்கு வந்து கொண்டிருந்தவேளையில், ஒரு இடத்தில் வீரப்பன் கும்பல் ஒசூரின் கரை வழிமறித்தது.துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் ஒசூரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இருப்பினும்கையில் வைத்திருந்த சூட்கேஸால் பாய்ந்து வந்த குண்டுகளைத் தடுத்து உயிர்தப்பினார் ஒசூர்.

ஒசூர் தொடர்ந்து கூறுகையில், காட்டுக்குள் அவன் ஒரு பூனை மாதிரி உலாவுகிறான்.எங்கே இருக்கிறான், எப்படிப் போகிறான் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது.அவனும், கூட்டாளிகளும் அடிக்கடி விலங்குகள் போல சப்தம் எழுப்பிக்கொண்டிருப்பார்கள். இதன் மூலம் தகவல்களையும் பரிமாறிக் கொள்வார்கள்.

காட்டில் எங்கு நீர்ச் சுனை உள்ளது என்பது வீரப்பனுக்கு அத்துப்படி. எங்கேயானைகள், புலிகள், நரிகள், காட்டுப் பூனைகள், பாம்புகள் இருக்கும் என்பதும்அவனுக்குத் தெரியும்.

வீரப்பனுக்குத் தகவல் தருவதற்காக உள்ள நெட்வொர்க் கற்பனைக்கும்அப்பாற்பட்டது. மிகப் பெரிய நெட்வொர்க் அது. மழைக் காலங்களில் வீரப்பனைப்பிடிக்க காட்டுக்குள் செல்லவே முடியாது. அட்டைகள் தோலை உரித்து விடும். ஆனால்வீரப்பனுக்கு அதுபற்றியெல்லாம் கவலை கிடையாது என்றார் ஒசூர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X