For Daily Alerts
Just In
கர்நாடக எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச் சூடு
பெங்களூர்:
கோலார் மாவட்டத்தை சேர்ந்த கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுடப்பட்டார்.
ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் வெங்டேசப்பா (51). இவர் வியாழக்கிழமை பெங்களூரில்இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள புவனஹள்ளியில் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது வீட்டில் நுழைந்த ஒரு கும்பல் அவர் மீது சுட்டது. இதில் அவரது கால்களில் குண்டுக் காயம் ஏற்பட்டது.
வீரப்பன் கலாட்டாவால் கர்நாடகத்தில் ஏற்கனவே பரபரப்பு நிலவுகிறது. இந் நிலையில் ஆளும் கட்சியின்எம்.எல்.ஏ. மீது துப்பாக்கி சூடு நடந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Thursday, August 10, 2000, 5:30 [IST]