For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"போலாரிஸ்" தலைவரின் பாஸ்போர்ட் ஒப்படைப்பு: இந்தியா திரும்புகிறார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட "போலாரிஸ்" சாப்ட்வேர்நிறுவனத்தின் தலைவர் அருண் ஜெயினின் பாஸ்போர்ட்டை அந்நாட்டு அதிகாரிகள் இன்று அவரிடம் மீண்டும்ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் விரைவில் சென்னை திரும்புகிறார்.

இந்தோனேஷியாவில் உள்ள "பாங்க் ஆப் கிரஹா" கொடுத்த புகாரின் அடிப்படையில் அருண் ஜெயினும், துணைத்தலைவர் ராஜிவ் மல்ஹோத்ராவும் ஜகார்தாவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து மத்திய அரசு நேரடியாகத் தலையிடவே, அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை திருப்பி ஒப்படைக்காமல் இந்தோனேஷியா இழுத்தடித்துக்கொண்டிருந்தது. இதனால் அவர்கள் இந்தியா திரும்புவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்நிலையில் ஜெயின் மற்றும் மல்ஹோத்ராவின் பாஸ்போர்ட்டுகளை இந்தோனேஷிய அதிகாரிகள் இன்றுஅவர்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர். இதனால் அவர்கள் இந்தியா திரும்புவதற்கான தடை நீங்கிவிட்டது.

இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் இருவரும் சென்னை வந்து சேருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் வேறு வேலை எதுவும் இல்லையென்றால் அவர்கள் இன்றேதிரும்புவார்கள் என்றும் தெரிகிறது.

இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிப்போம் என்று சென்னையைத்தலைமையிடமாகக் கொண்ட "போலாரிஸ்" நிறுவனத்தின் துணைத் தலைவரான ரகுராமன் பாலகிருஷ்ணன்கூறினார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X