நிருபர் கடத்தலில் பிடிபட்ட ஒசாமாவின் முன்னாள் பைலட்
நியூயார்க்:
அமெரிக்க நிருபர் கடத்தலில் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் முன்னாள் பைலட் உள்பட 2முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காலித் காவாஜா மற்றும் அஸ்லாம் கான் ஷெரானி ஆகிய 2 முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளைப்பிடித்து டேனியல் கடத்தல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் 2 பேருக்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்றும் சோவியத் ரஷ்யாவுடன்நடந்த போரில் சோவியத் படைகளை எதிர்த்து ஆக்ரோஷமாகச் சண்டையிட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னாள் பாகிஸ்தான் விமானப் படை அதிகாரியான காவாஜா, பின் லேடனுக்கு முன்பு விமானம் ஓட்டியுள்ளார்என்பதும் தெரிய வந்துள்ளது.
மற்றொரு அதிகாரியான ஷெரானி, சோவியத் படைகளை எதிர்த்துச் சண்டை போட்டவர்களுக்குத் தீவிர ஆயுதப்பயிற்சி அளித்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஷேக் முபாரக் அலி ஷா கிலானி என்ற தீவிரவாதியிடம் பேட்டி எடுப்பதற்காகக் கிளம்பிய பிறகுதான் டேனியல்கடத்தப்பட்டுள்ளார். முபாரக்குடன் காவாஜாவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதுகண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரிடம் தற்போது போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.
காவாஜா உள்பட சிலர் மூலமாகத்தான் முபாரக்கிடம் பேட்டி எடுப்பதற்கு டேனியல் தேதி வாங்கியதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications