சென்னை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி
சென்னை:
சென்னை விமான நிலையத்துக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு மீண்டும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டது.
இச் சம்பவத்தை அடுத்து இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு செல்லபார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்துக்குள்ளும் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், இரண்டு மாதத்துக்கு முன்பு இத் தடை நாட்டில் உள்ள எல்லா விமானநிலையங்களும் வாபஸ் பெற்றுக் கொண்டன. இலங்கைப் பிரச்சினை காரணமாகசென்னை விமான நிலையத்தில் மட்டும் இத் தடை நீடித்தது.
கடந்த 8 மாதமாக நீடித்து வந்த இத் தடையை இப்போது சென்னை விமான நிலையம்விலக்கிக் கொண்டுள்ளது. இதையடுத்து இனி சென்னை விமான நிலையத்துக்குள்பார்வையாளர்கள் செல்லலாம்.
சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் பார்வையாளர்களிடம் கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
கடந்த 8 மாதமாக பார்வையாளர்கள் யாரும் விமான நிலையத்துக்குள் நுழையஅனுமதிக்கப்படாததால் விமான நிலையத்துக்கு ரூ. 7 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.