நெடுஞ்செழியன் எழுதிய 2 புத்தகங்கள் - ஜெயலலிதா வெளியிடுகிறார்
சென்னை:
மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறள் பொழிப்புரை, வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் ஆகிய இரண்டு நூல்கள் சென்னையில்நாளை வெளியிடப்படுகின்றன.
மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறள் பொழிப்புரை, வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் ஆகிய இரண்டு நூல்கள் சென்னையில்நாளை வெளியிடப்படுகின்றன.
தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் முனனாள முதல்வருமானஜெயலலிதா கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிடுகிறார்.
முதல் பிரதியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி பெற்றுக்கொள்கிறார். நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் சிட்டிபாபுவாழ்த்துரை வழங்குகிறார். இரா.செழியன் வரவேற்றுப் பேசுகிறார். அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.பி.நன்றி கூறுகிறார்.
திருக்குறள் பொழிப்புரை 372 பக்கங்களில் அச்சிடப்படுள்ளது. இதன் விலை ரூ 20.
வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் புத்தகம் நெடுஞ்செழியனின் வரலாற்று நூல். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களைப் பற்றியபல அரிய செய்திகளை எடுத்துக் கூறும் நூலாகும்.
மொத்தம் 614 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 20-ம் நூற்றாண்டில் அரசியல் போக்கு, அதில் நாவலரின் தொண்டுகள் பற்றி தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, அவற்றில் அண்ணா, நெடுஞ்செழியன் ஆகியோரின் பங்கு முதலியசெய்திகளும் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ. 140.
தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் முனனாள முதல்வருமானஜெயலலிதா கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிடுகிறார்.
முதல் பிரதியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி பெற்றுக்கொள்கிறார். நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் சிட்டிபாபுவாழ்த்துரை வழங்குகிறார். இரா.செழியன் வரவேற்றுப் பேசுகிறார். அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.பி.நன்றி கூறுகிறார்.
திருக்குறள் பொழிப்புரை 372 பக்கங்களில் அச்சிடப்படுள்ளது. இதன் விலை ரூ 20.
வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் புத்தகம் நெடுஞ்செழியனின் வரலாற்று நூல். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களைப் பற்றியபல அரிய செய்திகளை எடுத்துக் கூறும் நூலாகும்.
மொத்தம் 614 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 20-ம் நூற்றாண்டில் அரசியல் போக்கு, அதில் நாவலரின் தொண்டுகள் பற்றி தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி, அவற்றில் அண்ணா, நெடுஞ்செழியன் ஆகியோரின் பங்கு முதலியசெய்திகளும் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ. 140.