இந்தியாவின் தனி நபருக்கான உணவுப் பொருள் உற்பத்தி அளவு குறைவு
டெல்லி:
இந்தியாவில் தனி நபருக்கான உணவுப் பொருள் உற்பத்தி உலக சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளதாகசமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.
தனி நபருக்கான உணவுப் பொருள் தேவை உலக அளவில் சராசரியாக 309 கிலோ என்று உள்ளது. ஆனால்,இந்தியாவில் இந்த அளவு 200 கிலோ என்ற அளவில்தான் உள்ளது.
உலக அளவில் உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது என்றாலும், தனிநபருக்கான உணவுப் பொருள் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் உணவுப் பொருள் உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தஆண்டில் 20.5 கோடி டன் அளவுக்கு உணவுப் பொருள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருள் உற்பத்தி அதிகரித்தாலும், அளவுக்கு அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம்தான் தனிநபருக்கான உணவுப் பொருள் உற்பத்தி குறைவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.