திரிபுராவில் பதற்றம் நீடிக்கிறது - 48 மணி நேரத்தில் 6 பேர் சாவு
அகர்த்தலா:
திரிபுராவில் கடந்த 48 மணி நேரத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பதற்றம்தொடர்ந்து நீடிக்கிறது. பாதுகாப்புப் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு திரிபுராவில் உள்ள ஜாய்ஸ்ரீ என்ற இடத்தில் தொழிலதிபர் ஒருவரை தீவிரவாதகும்பல் கடத்திச் சென்றது. இச் சம்பவத்தை அடுத்து ஜாய்ஸ்ரீ மற்றும் அதைச் சுற்றியுள்ளகிராமங்களில் கலவரம் பரவியது.
கலவரத்தில் ஒரு மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர் உள்பட 4பேர் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன.
இச் சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்றனர்.கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, திரிபுராவில் தேவன்பாரி என்ற இடத்தில் இரு இளைஞர்களைதீவிரவாதிகள் கொன்றனர். காட்டுக்கு விறகு எடுக்கச் சென்ற இவர்களை தீவிரவாதிகள்வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
திரிபுராவில் கடந்த 48 மணி நேரத்தில் 6 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
திரிபுரா முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும்பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.